பத்தாம் வகுப்பு சாதனை . . .

10ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

10ம் வகுப்பு தேர்வில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்குவேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தவிர மேலும் 8 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.


இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 52 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளனர். 


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 137 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.