குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு..!

தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.

ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். 

ஜூலை 17 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். 

எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது.

விண்ணபிக்க விரும்புவோர் நாட வேண்டிய தளம் www.tnpscexams.net