தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது"

   "தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது,"எனகோவை கல்லூரி விழாவில்கவிஞர் வைரமுத்து பேசினார்.

கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நேற்று நடந்த தமிழ் மன்ற துவக்க விழாவில்கவிஞர் வைரமுத்து பேசியதாவதுதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்தமிழை விட்டு தள்ளி நிற்கின்றனர்ஒவ்வொருவரும் தமிழ் மீது காதல் கொள்ளுங்கள்.விஞ்ஞான கல்வியுடன்வாழ்க்கையை நெறிப்படுத்தும் தமிழை கற்றுக்கொள்ளுங்கள்வாழ்க்கை முடிவில் நாம் விட்டுச் செல்வதுபுகழ்தான்.
வாழும் காலத்தில் நல்லதை செய்யவேண்டும்மாணவர்களின் கவிதைத்திறன்அவர்களின் முழுத்திறமைகளை வெளிப்படுத்தும் கருவிசொல்லை மட்டும் அல்லஅதிலுள்ள பொருளையும் கண்டுபிடித்துவாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள்உலகை புரிந்து வாழவேண்டும்தமிழை புரிந்து பேசி,பொருளை கண்டுபிடியுங்கள்குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை சூட்டுங்கள்விடாது உழைத்து வெற்றியடையுங்கள்அப்படிப் பெறும் வெற்றிக்கு உரிய மரியாதையை கொடுங்கள்உழைப்பின்றிவெற்றி கிடையாது.
வாழ்க்கை என்பதுஇன்பம்துன்பம்வறுமையை கொண்டதுஅனைத்து காலங்களையும்நிலைகளையும்,நிகழ்வுகளையும் சமமாக பாருங்கள்நாம் கற்கும் கல்விநமது சமூகத்தை மேம்படுத்த வேண்டும்தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாதுஅச்சம் தவிர்த்து உண்மையை பேசுங்கள்.உண்மையுடன் செயல்படுங்கள்.
இந்நாடுஉங்களை நம்பியுள்ளதுசினிமா வாழ்க்கை கற்பனையானதுதமிழ் சினிமாவை நம்பாதீர்அதில்,காதலின் ஒரு பகுதி மட்டுமே காண்பிக்கப்படுகிறதுசமூக வாழ்க்கையை காண்பிப்பதில்லைகாதல் என்பதுகண்ணில் தோன்றிஉள்ளத்தில் முடியும் ஒரு புரிதல்தியாகம் இன்றிவாழ்க்கை கிடையாது.விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
ஒரு நல்ல ஆசிரியர்தனது மாணவனின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்குழந்தைகளிடம் பண்பு,பரிவுஇரக்கம் காட்டுங்கள்தினமும் புத்தகம் படியுங்கள்புத்தகங்கள் பல நல்ல பண்புகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றனநல்ல வாசிப்பு என்பது நம்மை தூங்க விடாதுதூங்குவதற்கு புத்தகம் தேவையில்லைவாழ்க்கையை உயர்த்தவே புத்தகங்கள்.
இளம் வயதை பக்குவமாக கையாள வேண்டும்சொற்களை சரியாக பயன்படுத்துங்கள்சரியான சொற்கள்,பண்பாடு நமக்கு மிகவும் அவசியம்வாழ்க்கைக்கு தேவையான இங்கிதம்பண்பாடு ஆகியவற்றை தமிழ் இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கின்றன.

எந்த நோக்கமும் இன்பத்தை சார்ந்ததுஉண்மையான இன்பம்அறத்தால் வருவதுசத்தியத்தால் கிடைப்பதுநேர்மையான வாழ்க்கையால் வருவதுதவறான வழியில் கிடைக்கும் இன்பம்நிலைத்து நிற்பதில்லைபெண்களை மதியுங்கள்சமமாக கருதிவாய்ப்பு கொடுங்கள்இவ்வாறுகவிஞர் வைரமுத்து பேசினார்.